பிரியா அட்லி விருது விழா ஒன்றில் விஜய் பற்றியும் விஜய் மனைவி சங்கீதாவை பற்றியும் பேசியுள்ளார்.
Priya Atlee Speech in Award Function : தமிழ் சினிமாவின் ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக இயக்குனரானவர் அட்லி. ஷங்கரின் உதவி இயக்குனரான இவர் அதன் பின்னர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை கொடுத்தார்.
அட்லியின் மனைவி பிரியா விருது விழா ஒன்றில் விருது வாங்கிய பிறகு பேசியபோது விஜய்யும் சங்கீதா அக்காவும் இல்லையென்றால் நானும் அட்லியும் இல்லவே இல்லை.
தெறி படத்திலிருந்து எங்களுக்கு அவர்கள் இருவரும் அவ்வளவு சப்போர்ட் செய்து வருகிறார்கள். எங்கள் வீட்டில் நல்லது கெட்டது என எது நடந்தாலும் உடனே சங்கீதா அக்கா போன் செய்து நலம் விசாரித்து விடுவார்.
அவர்கள் இருவருக்கும் மிகப் பெரிய நன்றி. அட்லீ தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது. நாங்கள் முதலில் நண்பர்களாகி பின்னர் தான் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டோம். அதனால் தான் எங்களுக்கு இடையேயான உறவு பலமாக உள்ளது என பேசியுள்ளார்.