விக்ரமை தொடர்ந்து கர்ணன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார் பிரபல நடிகர்.
Prasanth Wishes to Karnan Team : தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். நடிகர் விக்ரம் படம் பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ் வீட்டிற்கு நேரில் சென்று பாராட்டு தெரிவித்து இருந்தார்.
விக்ரமை தொடர்ந்து நடிகர் பிரசாந்த் கர்ணன் படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.