Pranab Mukherjee in Coma Stage : முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கோமா நிலையில் இருப்பதாகவும் தில்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பிரணாப் முகர்ஜி கடந்த 10ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளை ரத்தம் உறைந்து ஏற்பட்ட கட்டிகளை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராணுவ மருத்துவமனையில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து சீராகவே உள்ளது. அதில் எந்த ஒரு ஏற்ற இறக்கமும் காணப்படவில்லை. அவர் தொடர்ந்து செயற்கை சுவாசம் கருவியின் உதவியுடன் ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து வதந்திகள் வலம் வரத் தொடங்கிய நிலையில் அவரது மகன் அபிஜித் முகர்ஜி ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் குடியரசுத்தலைவர் உடல்நிலை கவலைக்கிடம்!
அதில் ” எனது தந்தை உயிருடன் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. சிலர் சமூகவலைதளங்களில் எனது தந்தையின் உடல் நிலை தொடர்பாக போலியான அறிவிப்பு வெளியாவது மிகுந்த கவலை அளிக்கிறது” என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.