vijay
பிகில் இசை வெளியீட்டு விழாவில் என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என விஜய் பேசிக்கொண்டிருக்கும் போதே, வெளியே அவரின் ரசிகர்களை போலீசார் வெளுத்து வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.

Police baton charge on Vijay fans in bigil function- பிகில் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்தது. அந்த மேடையில் பேசிய விஜய் ‘என் பேனர்களை கிழியுங்கள். கட் அவுட்டுகளை உடையுங்கள்.. ஆனால், என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்’ எனப்பேசினார். சர்கார் படம் வெளியான போது சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் அவரின் பேனரை அதிமுகவினர் கிழித்து எறிந்து ரகளையில் ஈடுபட்டதை மனதில் வைத்தே விஜய் பேசினார்.

அதே நேரம், பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு முறையாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பல ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் அரங்கினுள் நுழைய முயன்றனர். எனவே, போலீசார் அவர்களை அடித்து விரட்டினர். இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. 10 ஆயிரம் பேர் அமரும் விழாவிற்கு ஏஜிஎஸ் நிறுவனம் 20 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்றுள்ளதாகவும், விஜயை வைத்து அவர்கள் அரசியல் செய்வதாகவும் விஜய் ரசிகர்கள் புகார் கூறியுள்ளனர்.

என் ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம் என விஜய் கூறினார். ஆனால், அரங்கு வெளியே விஜய் ரசிகர்களை போலீசார் அடி வெளுத்துள்ளனர். இதற்கு விஜய் என்ன சொல்லப் போகிறார் என தெரியவில்லை.