PM does not Care People :
திருப்பரங்குன்றம்: தமிழக மக்களைப் பற்றி பிரதமர் மோடிக்கு கவலையில்லை என்று திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து மதுரை விரகனூர், கோழிமேடு உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2 வது கட்டமாக பிரச்சாரம் மேற்கொண்டார்.பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியதாவது, ‘ஆட்சி மாற்றம் வந்தவுடன் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலைகள் குறைக்கப்படும்’ .
பிரசாரத்திற்கு கூட வராத கேப்டன், தற்போதைய நிலை என்ன? – வைரலாகும் புகைப்படம்.!
ஏழை எளிய பெண்களுக்கு திருமண செலவுக்கு நிதி கொடுக்கும் திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் என்று பிரச்சாரத்தில் பேசினார்.
2 நாட்கள் முதல் கட்ட பிரச்சாரம் செய்தார், பின்னர்,. 2 வது கட்டப் பிரச்சாரம் இன்று ஒரு நாள் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று காலை ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள கோழிமேடு என்ற பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார்.
அப்போது அங்குள்ள மக்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் உரையாடினார். அதில், திமுக ஆட்சிக்கு வந்தால் செய்யக்கூடிய பல்வேறு நல திட்டங்களை குறித்து எடுத்து கூறினார்.
அப்போது அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் அதிக அளவில் குடிநீர் பிரச்சனை மற்றும் அடிப்படை பிரச்சனை உள்ளதாக கூறினர்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் அனைத்து அடிப்படை பிரச்சனைகளும் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார் . மேலும் தொழிலாளர்களின் கருத்துக்களையும், குறைகளையும் கேட்டறிந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து அடிப்படை கோரிக்கைகளையும் நிறைவேற்றப்படும் என்றும் வாக்களித்தார்.