மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்து இருந்த நிலையில் பிரதமர் மோடி பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
PM Announcement About 144 Extension : இந்தியாவில் கொரானா வைரஸ் தாக்கம் அதிவேகமாக பரவி வருவதால் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. 21 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் முடிவடைநத நிலையில் தமிழக அரசு ஏப்ரல் 30 வரை இதனை நீட்டித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றிய போது கரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் நீட்டிக்க பட வேண்டியது அவசியமாக உள்ளது. இதனால் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கொரானா அல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20 க்கு மேல் ஊரடங்கு தளர்த்தப் படும் எனவும் அறிவித்துள்ளார்.