PM About India Relationship with Other Countries : வளர்ச்சி சார்ந்த மற்ற நாடுகளுடன் இந்தியா கடைபிடிக்கும் நல்லுறவுக்கு எந்தவித நிபந்தனைகளும் விதிக்கப்படுவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் வளர்ச்சிக்கான நட்புறவில் மற்ற நாடுகளை மதிப்பதே இந்தியா முதன்மையான கொள்கையாக கொண்டுள்ளது.
அதற்கு சான்றாகவே, இந்தியாவின் உதவியுடன் மாலத்தீவுகளின் 34 தீவுக்கூட்டங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தி உள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தானிலும் கயானவிலும் கிரிக்கெட் மைதானங்களை அமைக்க இந்தியா உதவி செய்தது. அதுமட்டுமல்ல இலங்கையில் வீட்டுவசதி திட்டங்களை செயல்படுத்துவதிலும் இந்தியா முக்கிய பங்கு வகித்தது
மேலும் மொரிசியஸ் நாட்டுடன் இந்திய பெருங்கடலை மட்டும் இந்தியா பகிர்ந்து கொள்ளவில்லை மாறாக கலாச்சாரம் மொழி சகோதரத்துவம் உள்ளிட்டவற்றையும் இந்தியா பகிர்ந்து கொள்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.