கொரானா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது பெரம்பலூர் மாவட்டம்.
Perambalur District : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழகத்திலும் பல லட்சங்களை தாண்டி இருந்த பாதிப்பு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொரானா இல்லாத மாநிலமாக மாற முயன்று வருகிறது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது முதல் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் கொரானா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
தமிழக அரசின் அறிவுறுத்தல்களையும் நடவடிக்கைகளையும் தவறாமல் பின்பற்றிய பெரம்பலூர் மாவட்டம் தற்போது கொரானா இல்லாத மாவட்டமாக மாறியிருப்பது அம்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரில் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெகு விரைவில் கொரானா இல்லாத மாவட்டமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.