Pathma poosan Award to SPB

மறைந்த எஸ்பிபி க்கு விருது வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Pathma poosan Award to SPB : தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர், இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளராகவும் இருந்து வந்தவர் எஸ் பி பாலசுப்பிரமணியம். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற திரைப்படங்களிலும் அதிகமாக பணியாற்றியுள்ளார்.

இவர் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார். இவர் தேசிய திரைப்பட விருது, தென்னிந்திய பிலிம்ஃபேர் விருது, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு விருதுகளையும் அதிகமாக பெற்றுள்ளார்.

மேலும் உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ளார் பாடகர் எஸ். பி. பி.

ஆனால் எஸ்பிபி அவர்கள் கடந்த வருடம் செப்டம்பர் 25 covid-19 தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பிறகு காலமானார்.

திரையுலக பிரபலங்கள் அனைவரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இப்படியான நிலையில் மறைந்த SPBக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடன் இன்னும் ஏழு பேருக்கும் இந்த விருது வழங்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.