நீலம் புரொடக்ஷன்ஸ் பேனரில் கதிர், “கயல்” ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து, லிஜீஷ், சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்ட மற்றும் பலர் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், நெல்லைச் சீமையின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படமாக வெளிவந்துள்ளது “பரியேறும் பெருமாள்”.

கதைப்படி, திருநெல்வேலிக்கு அருகில் உள்ள புளியங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் கதிர். டாக்டர் அம்பேத்கர் மாதிரி ஆக வேண்டும் எனும் லட்சியத்துடன் சட்டம் படிப்பதற்காக சட்டக் கல்லூரியில் சேர்க்கிறார். ஆனால், ஆங்கில அறிவு அறவே இல்லாத காரணத்தால், கல்லூரி பேராசிரியர் ஒருவராலேயே ‘கோட்டா’வில் வந்தவன் என்று அவமானப்படுத்தப்படுகிறார். தனக்கு நேரும் அவமானங்களையும் மீறி, உடன் படிக்கும் நாயகி ஆனந்தியின் உதவி, யோகி பாபுவின் நல்ல நட்பு… ஆகியவற்றுடன்படிப்பை முடிக்க ஆசைப்படுகிறார் கதிர். கதிரின் அப்பாவித்தனத்தைப் பார்த்து நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார் ஆனந்தி. இருவருக்குமான நட்பு நெருக்கமாகிறது. ஆனந்தியின் மனதில் காதல் அரும்புகிறது. ஆனால், தன்னாலும், தன் ஜாதியாலும் அவருக்கு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாதென கதிர் ஒதுங்கியே இருக்கிறார். நாயகி ஆனந்தியின் வற்புறுத்தலால், அவரது வீட்டில் நடக்கும் ஒரு திருமணத்திற்குச் செல்லும் கதிர் அங்கு ஆனந்தியின் ஜா’தீய’ உறவுகளால் ஆனந்திக்கு தெரியாமல், அடித்து, உதைக்கப்பட்டு முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு விரட்டியடிக்கப்படுகிறார். பின்னர் கதிரை கொலை செய்யவும் திட்டம் தீட்டுகிறார்கள். அவற்றையெல்லாம் எதிர்கொண்டு கதிர் சட்டப் படிப்பை படித்து முடித்தாரா? இல்லையா..? யோகி பாபு யுடனான நட்பு என்னவாயிற்று? ஆனந்தியின் காதல் என்னவாயிற்று..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு நெல்லை சீமையின் கிராமிய மணமும் ஜா’தீய’ குணமும் கமழக்கமழ விடை சொல்கிறது “பரியேறும் பெருமாள்” படத்தின் மீதிக் கதையும், களமும்.

கதாநாயகர் பரியேறும் பெருமாள் ஆக கதிர். எந்த ஒரு காட்சியிலும் அவரைக் கதிராக ரசிிகர்களால் பார்க்கவே முடியவில்லை. படம்் முழுக்க பரியேறும் பெருமாள் எனும் பாத்திரமாகவே தெரிகிறார். சட்ட கல்லூரிிக்கு படிக்க வந்த பின்னும் ஆங்கில அறிவு சுத்தமாக இல்லாத அப்பாவித்தனத்துடன் கூடிய கிராாமத்து மாணவனாக நிறைய கோபதாபம், நாயகி ஆனந்தியுடன் ‘இனம்’ புரியா நட்பு, யோகி பாபுவுடனான கடைசி பென்ச் கூட்டாளி எனும் பாசம்… ஆகியவற்றுடன் கூடிய அவருடைய யதார்த்தமான நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் உயிர்ப்பாய் அமைந்துள்ளது. ஏற்கனவே இரண்டொரு படங்களில் நாயகராக நடித்திருந்தாாலும் இந்த பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான சரியான பரி (குதிரை) ஏறியிருக்கிறார் கதிர்… என்று சொன்னால் மிகைையல்ல!

கதாநாயகியாக “கயல்” ஆனந்தி… ஜோ என்கிற ஜோதி மகாலட்சுமி… எனும் பாத்திரத்தில், கல்லூரியில் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு தோழி கிடைக்க மாட்டாரா? என்று ஏங்க வைக்கிறார். கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள் கூட நமக்கெல்லாம் இப்படி ஒரு தோழி கிடைக்காமல் போய்விட்டாரே..? என்று நிச்சயம் வருத்தப்படுவார்கள். கள்ளம் கபடமில்லாத சிரிப்பு, சக மாணவனிிடம் உண்மையான நேசம், பாசம்… என சித்தரிிக்கப் பட்டிருக்கும் அவர் கதாபாத்திரத்தின் மீதே படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தனி மரியாதை வந்துவிடுகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த ஜோதி மகாலட்சுமி கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக நிச்சயம் இருக்கும்.

யோகி பாபு, “நான் சாதி பார்த்தா உன்னுடன் பழகுகிறேன்?” என நட்பின் இலக்கணத்தைப் பேசி நெகிழ வைக்கிறார். ஆனால். அவர், நாயகர். கதிரைக்காட்டிலும் உசந்த ஜாதி என்பதை ரசிகர்கள் நம்புவது சற்றே கடினம். மற்றபடி, அவ்வப்போது சின்னச் சின்ன நகைச்சுவைகளை உதிர்த்து அவருடைய கதாபாத்திரத்தை ரசிக்க, சிரிக்க வைக்கிறார் யோகி பாபு. சபாஷ் பாபு!

கதிரின் பொய்யான அப்பாவாக ஒரே ஒரு காட்சியில் வந்து, எப்பவுமே நடிப்பை உச்சுத்துல காட்டுனாதான் மத்தவன் கிட்டத்துல வந்து நோண்ட மாட்டான்… என்றபடி “தங்கப் பதக்கம்” செளத்ரி கேரக்டர் சிவாஜியாக தன்னை கற்பனை செய்து கொண்டு கதிரையும், கதிரின் கல்லூரி முதல்வரையும் கலங்கடித்து கலகலக்க வைக்கும் சண்முகராஜன், தன் வீட்டு கிடேரியை தட்டிக் கொடுத்து விட்டு, அடுத்தவர் வீட்டு காளையை அடக்க முயன்று, அது முடியாததால் அடங்கிப் போகும் ஆனந்தியின் மேல் ஜாதி அப்பாவாக மாரிமுத்து, தன் ஜாதிக்காக சாட்சிகள் இல்லாது பல கொலைகள் செய்து, கடைசியில் தற்கொலை செய்து கொள்ளும் தாத்தாவாக கராத்தே வெங்கடேசன், ஆனந்தியின ஒன்று விட்ட. அண்ணனாக. அறிமுகம் ஆகியுள்ள விஜிஷ், நாயகர் சட்டம் படிக்க காரணகர்த்தாாவான கிராமத்து ஆசாமியாக வரும் சூப்பர் குட் சுப்பிரமணி, கதிருக்கு பக்கபலமாக விளங்கும் கல்லூரி முதல்வர் ராமு, யதார்த்தமான பேராசிரியைகள், பேராசிரியர்கள்… சகமாணவர்கள்…. என ஒவ்வொருவருமே அவரவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்களாகவே மாறி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். அதிலும் தெருக்கூத்தில் பெண் வேஷம் கட்டி ஆடி ஆடி பெண் தன்மை நிரம்பியவராகவே காட்சி தரும் கதிரின் நிஜ அப்பா கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் இதுவரை காட்டப்படாத ஒரு தந்தை பாத்திரம். அதில் அசத்தலாக நடித்துள்ள, இல்லை, இல்லை… வாழ்ந்துள்ள… தங்கராஜ் மிரட்டல்!

செல்வா. R.Kயின் படத்தொகுப்பு, பக்கா தொகுப்பு என்பது படத்திற்கு பெரும் பலம். அதே மாதிரி, ஸ்ரீதர் ஒளிப்பதிவில் கல்லூரி காட்சிகளும், கிராமத்து காட்சிகளும் கதையோடு கதாபாத்திரங்களாகவே நம்மை வசீகரிப்பது கூடுதல் பலம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் நெல்லை மண் வாசம் வீசும் பாடல்கள். அனைத்துமே ரசிிகனை தாளம் போட வைக்கின்றன. அதிலும், குறிப்பாக ‘கருப்பி ஓ கருப்பி..”, “வணக்கம் வணக்கமுங்க..”, “வாா ரயில் விட போகலாம் வா …”பாடல்கள்… ரசனைை!

இயக்குனர் மாரி செல்வராஜ், படத்தில் இடம் பெற்றுள்ள புளியங்குளம் கிராமத்திற்குள் நம்மையும் அழைத்து சென்று விட்டார் என்று சொல்லும் அளவிற்கு படத்துடன் நம்மை ஒன்ற வைத்துள்ளார். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு கதை இருக்கிறது, இந்தக் கதை இயக்குனர் மாரி செல்வராஜ். பார்த்து, அனுபவித்த சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது… எனலாம்.

ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வைவிட வாழ்க்கையில் படித்து முன்னேறத் துடிக்கும் ஒரு இளைஞனுக்கு நேர்ந்த சில வன்கொடுமைகளை நேரில் பார்க்கிறோமோ? என்று சொல்லுமளவிற்கு இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

மேலும், மாரி செல்வராஜின் எழுத்து, இயக்கத்தில் இந்த காலத்தில் இப்படி ஒரு ஜா”தீய” அடையாளங்கள் நிரம்பிய திரைப்படம், தேவையா? எனும் கேள்விகள்் ஒரு பக்கம், இப்படம் பார்க்கும் பலருக்கும் எழும்பி நின்றாலும், இப்படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த பின்னும் இந்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் பாதிப்பு நம்முள் இருக்கும். இதுவே இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி… எனலாம்!

மொத்தத்தில், “பரியேறும் பெருமாள்’ – ‘பலராலும் கொண்டாடப்படுவான்!”

Rating: 3.75/5