ஆதித்ய வர்மா படத்துக்கு முன்பாகவே த்ருவ் விக்ரமுக்கு தேசிய விருது பெற்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Pandiraj About Vikram : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
ஆனால் அதற்கு முன்பாகவே பசங்க படத்தில் த்ருவ் விக்ரமை தான் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இருந்தேன். ஆனால் அப்போது கதையைக் கேட்டுவிட்டு விக்ரம் இப்போது என் மகனுக்கு சினிமா வேண்டாமே என கூறிவிட்டார்.
மனைவிகளால் வந்த வினைதான் கரோனா வைரஸ், சர்ச்சை இயக்குனரின் கிண்டல் பேச்சு – இதோ பாருங்க.!
அதன் பின்னர் நான் ஒருமுறை வேறொரு படத்தின் கதையை கூற விக்ரமை சந்தித்திருந்தேன். அப்போது விக்ரம் இவர்தான் முதன்முதலில் துருவை நடிக்க அழைத்தது என தன் மனைவியிடம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து அவர் என் மனைவி என் மகனுக்கு கிடைக்க இருந்த தேசிய விருதை கெடுத்து விட்டீங்களே என செல்லமாக கோபித்துக் கொண்டு உள்ளார். இந்த மறக்க முடியாத அனுபவத்தை பாண்டிராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.