Pandian Stores Kumaran About Chithra

என்னால தான் சித்ராவுக்கு பிரச்சனை என கண்ணீர்விட்டு தேம்பித் தேம்பி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார் குமரன்.

Pandian Stores Kumaran About Chithra : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இவருக்கு ஜோடியாக நடித்த குமரனுக்கும் இவர்களின் ஜோடிக்கும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் பார்ப்பவர்களின் பலபேர் இந்த ஜோடிகள் தான் பார்க்கின்றனர். ஆனால் இன்று சித்ரா நம்முடன் இல்லை. மன உளைச்சல் காரணமாக இரு தினங்களுக்கு முன்னர் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவருடைய மறைவு சின்னத்திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் சித்ராவின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு வருகின்றனர்.

இப்படியான நிலையில் குமரன் வீடியோ ஒன்றில் சித்ராவுக்கு என்னால் தான் பிரச்சனை என கூறியுள்ளார்.

சித்ராவின் இறப்பு குறித்து கண்ணீருடன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

அதாவது நான் பாண்டியன் ஸ்டோர் தவிர வேறு எதற்கும் அதிகமாக டேட் கொடுக்க மாட்டேன். ஆனால் சித்ரா அப்படி இல்லை மல்டி டாஸ்க் செய்பவர். சிலசமயங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நாளைக்கு நீங்க டேட் கொடுத்து இருக்கீங்களா எனக் கேட்பார்? ஆமாம் என்று கூறுவேன். அப்போது அவர் கூறுவார் உங்களால தாங்க பிரச்சனை நீங்க கேட்டதும் டேட் கொடுத்துறீங்க என கூறுவார்.

அவர் அன்று சொன்னது எனக்கு புரியவில்லை இப்போது புரிகிறது. அவருக்கு ஓய்வு என்பதே இல்லை. இனியாவது நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் கண்ணீர் ததும்ப பேசியுள்ளார்.