Pa.Ranjith & VIjay : தளபதி விஜயை சந்தித்த பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் விஜய் என்ன செய்தார் தெரியுமா?
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான சர்கார் படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.
இதுவரை பாக்ஸ் ஆஃபிஸில் ரூ 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் AGS நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான சங்கிலி முருகன் தளபதி விஜயை பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்ததாக கோலிவுட் வட்டாரங்கள் பேசி அடிபட்டு வருகிறது.
மேலும் இதற்காக விஜயிடம் கேட்ட போது அதற்கு விஜய் எந்தவித பதிலையும் கூறாமல் மெளனமாக இருந்து சங்கிலி முருகன் அவர்களை முறைத்துள்ளார்.
மீண்டும் ஒரு முறை இது குறித்து விஜயிடம் கேட்டதற்கு அப்போதும் இதே முறைப்பை தான் பதிலாக கொடுத்தாக கிசுகிசுக்கப்படுகிறது.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஆனாலும் ரசிகர்கள் ரஞ்சித் சூப்பர் ஸ்டாரை வைத்து கபாலி, காலா என இரண்டு படங்களை இயக்கியும் இன்னும் அவர் மீது நம்பிக்கை வரவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.