ஊரடங்கு நடுவே விமானத்தில் பயணம் செய்ததால் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
P Chidambaram Return to Chennai : கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.
இந்த வைரசின் தாக்கம் காரணமாக இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் இருந்து வருகின்றனர். மக்களைப் போலவே முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் அவர்களும் சென்னை வர முடியாமல் இரண்டு மாதங்களாக டெல்லியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் இருந்து 78 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர் விமானத்தில் ப சிதம்பரமும் சென்னை வந்தடைந்தார்.
சென்னை வந்தடைந்த இவரை ஏர்போர்ட்டில் அதிகாரிகள் சோதனை செய்த பின்னர் 14 நாட்கள் தனிமை படுத்தி கொள்ள வேண்டும் என்று முத்திரை இட்டனர்.
சிதம்பரமும் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதாக சுய உறுதிமொழி எடுத்துக் கொண்டு அந்த இடத்தில் இருந்து வெளியேறினார்.