ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் அனுப்பியதை கண்டு வாலிபர் அதிர்ச்சியில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவுரங்காபாத்தில் ஊரக வளர்ச்சிதுறை குடியிருப்பில் வசித்து வருகிறார் கஜனன் காரத். இவர் கடந்த அக்.9 தேதி ஆன்லைனில் ரூ.9134 க்கு ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்துள்ளார்.
இதையடுத்து, ஆர்டர் செய்த ஸ்மார்ட் போன் பார்சல் வந்துள்ளது. அதை பிரித்து பார்த்த கஜனன் அதிர்ச்சி அடைந்தார். அதில் ஸ்மார்ட் போன் பதிலாக செங்கல் இருந்தது. இதைப்பற்றி கொரியர் டெலிவரி செய்த நபரிடம் விசாரித்த போது, பார்சல் கொண்டு வருவது மட்டுமே என் வேலை இதை பற்றி எனக்கு எதும் தெரியாது என கூறியுள்ளார்.
இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் கஜனன். இதை தொடர்ந்து மோசடி வழக்கில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக ஆய்வாளர் மணீஷ் கல்யாண்கர் தெரிவித்துள்ளார்.