O. Panneerselvam Latest Speech
சென்னை மாநகரில் உள்ள நீர்வளங்களை திட்டமிட்டு நீர் பாதுகாப்பை மேம்படுத்த ஏதுவாக புதிதாக நீர்க் குழுமம் தொடங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சென்னை மாநகரின் வளர்சிக்காக உலக வங்கியின் துணையுடன் திட்டம் வகுப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநிலத்தின் நீர்வள ஆதாரங்களை பாதுகாப்பதை முதன்மையாக நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார். அதனால் தமிழகத்திற்கு 2019ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய நீர் விருது கிடைத்ததாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்ட பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1418 கோடி ரூபாய் செலவில் 6211 பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 5886 பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.