balachandiran

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 4 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் ‘ தற்போது தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு நிலவுகிறது. இதன் காரணமாக இன்னும் 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இன்னும் 4 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடரும். எனவே, 19,20,21 ஆகிய தேதிகளில் கேரள, கர்நாடக, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன்படிக்க செல்ல வேண்டாம்’ என அவர் தெரிவித்தார்.