8 மணிக்கு மேல் புயல் கரையை கடக்க தொடங்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
Nivar Cyclone Update : தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று இரவு சென்னை மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை மூன்று முப்பது மணி நிலவரப்படி இனிமேல் இரவு எட்டு மணிக்கு மேல் புயலின் முன்பகுதி கரையை கடக்க தொடங்கும்.
மையப்பகுதி கரையை கடக்க தொடங்க கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் எடுத்துக்கொள்ளும். புயல் கரையை கடந்த பிறகும் ஆறு மணி நேரத்திற்கு பாதிப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அன்போடு கேட்டுக் கொள்வதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.