துல்கர் சல்மான் என்னை திருமணம் திருமணம் செய்து கொள் என வற்புறுத்தினார் என்று நித்யா மேனன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Nithya Menon About Dulquar Salman : தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி என்ற படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானவர் நித்யாமேனன். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் தற்போது புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் இவர் பேட்டி ஒன்றில் நான் அடிக்க வேண்டும் என்றெல்லாம் சினிமாவிற்கு வரவில்லை. சும்மா ஒரு படத்தில் நடித்து விட்டு செல்ல தான் வந்தேன்.
உஸ்தட் ஹோட்டல் என்ற படத்தில் இருந்தே நானும் துல்கரும் நெருங்கிய நண்பர்களானோம். அவர் சீக்கிரம் திருமணம் செய்து கொள், குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொள் என கூறினார் எனப் பேசியுள்ளார்.