Nisha 1st Post After Bigg Boss

யாரையும் காயப்படுத்த கூடாது என நினைத்தேன் ஆனால் இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிஷா அதிர்ச்சிகர பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Nisha 1st Post After Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக அறந்தாங்கி நிஷா பங்கேற்றார். இவர் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அறந்தாங்கி நிஷாவுக்கு மக்கள் மத்தியில் தற்போது எதிர்மறையான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. ரியோ மற்றும் அர்ச்சனாவுக்காக மட்டுமே விளையாடியதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் நான் யாரையும் காயப்படுத்த விடக்கூடாது என்று விளையாடினேன் ஆனால் இன்று நான் காயப்பட்டு விட்டேன் என தெரிவித்துள்ளார்.