டோட்டலாக மாறி தற்போது புதிய மாற்றத்தினை கொண்டு வந்துள்ளார் நடிகர் சிம்பு.
New Changes From Simbu : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றைய முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.
இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கத்தில் 35 நாட்களில் உருவான இந்த திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பொதுவாக சிம்பு ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வந்தது. இதன்கரணமாகவே அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் பெரும் தோல்வியைத் தழுவியதாக அதன் தயாரிப்பாளர் இன்றுவரை குற்றம் கூறி அதற்கு நஷ்டஈடு கேட்டு வருகிறார்.
ஆனால் தற்போது சிம்பு முற்றிலுமாக மாறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதெல்லாம் 6 மணிக்கு ஷூட்டிங் என்றால் விடியற்காலை 5 மணிக்கு ஸ்பாட்டில் இருக்கிறாராம் சிம்பு.
சிம்புவின் இந்த அதிரடியான மாற்றம் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களுக்கே ஆச்சரியமாகத்தான் உள்ளது என பலர் கூறி வருகின்றனர்.
சிம்புவின் இந்த புதிய மாற்றம் அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இத தான் தலைவா உங்ககிட்ட இருந்து எதிர்பார்த்தோம் என மகிழ்ச்சியோடு கூறிவருகின்றனர்.