Nenjam Marapathillai Release Issue

நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Nenjam Marapathillai Release Issue : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் எஸ். ஜே சூர்யா நாயகனாக நடித்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 5-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரி ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்காக எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் ரூபாய் 2.42 கோடி வரை கடன் வாங்கியதாகவும் படத்தை வெளியிடுவதற்கு முன்னால் ரூபாய் 1.75 கோடி ரூபாயை கொடுத்து விட்டதாகவும் மீதமுள்ள ரூபாய் 1.24 கோடி திருப்பி செலுத்தும் வரை படத்தினை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி படத்தின் ரிலீஸுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.