NedunalVadai Review : அறிமுக இயக்குனர் செல்வகண்ணன் இயக்கத்தில் பி ஸ்டார் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் பூ ராம், இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் நெடுநல்வாடை.
கதைக்களம் :
ஒரு கிராமத்தில் வசித்து வரும் பூராமின் மகள் ஒருவருடன் ஓடி சென்று திருமணம் செய்து கொண்டு அதன் பின் வாழ்க்கையை துளைத்து விட்டு ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் தன்னுடைய அப்பா வீட்டிற்க்கு வந்து விடுகிறார்.
பூராமும் தன்னுடைய மகளை ஏற்று கொண்டு பேர குழந்தைகள் மீது அதிகமான பாசத்தை கொட்டி வளர்க்கிறார். இவரது பேரனான இளங்கோ படிக்கும் போதே அஞ்சலி நாயரை காதலிக்கிறார்.
தன்னுடைய தாத்தா இந்த வயதில் காதல் எல்லாம் வேண்டாம் என கூறியும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ஊரை விட்டு ஓடி போய் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். அதன் பின் என்ன நடந்தது என்பது தான் இப்படத்தின் எதார்த்தமான கதை.
நடிகர் நடிகைகள் நடிப்பு :
பூ ராம் :
பூ ராம் தான் இந்த படத்தின் முதுகெலும்பு. ஒரு தந்தையாகவும் பாசமுள்ள தாதாவாகவும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கான இவருக்கு சிறந்த நடிகருக்கான விருதை அளித்தாலும் அது 100% சரியாக இருக்கும்.
இளங்கோ :
அறிமுக நடிகர் என்று சொல்ல முடியாத அளவிற்க்கு கதாபாத்திரமாகவே மாறியுள்ளார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
அஞ்சலி நாயர் :
அறிமுக நாயகியாக நடித்துள்ள அஞ்சலி நாயர் கிராமத்து பெண்ணாக வாயாடியாக வம்பு சண்டை காரியாக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்.
இதர நடிகர் நடிகைகள் :
மைம் கோபி மற்றும் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவருமே சிறப்பான நடிப்பை பதிவு செய்துள்ளனர்.
தொழில்நுட்பம் :
இசை : ஜோஸ் பிராங்களின் இசை படத்திற்கு ஏற்றார் போல கச்சிதமாக அமைந்துள்ளது.
இயக்கம் :
அறிமுக இயக்குனரான செல்வ கண்ணனின் இயக்கம் பிரமாதம். கதையை எவ்வித தொய்வும் இல்லாமல் சரியான பாதையில் கொண்டு சென்றுள்ளார்.
தம்ப்ஸ் அப் :
1. ஒட்டு மொத்த நடிகர், நடிகைகளின் நடிப்பு
2. கதை
3. திரைக்கதை
4. வசனம்