தான் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்பான விழாக்களிலும் ஏன் கலந்து கொள்வதில்லை, ஏன் பேட்டிகள் கொடுப்பதில்லை என்பது பற்றி நடிகை நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார்.
Nayanthara explain why not giving interviews – துவக்கம் முதலே நடிகை நயன்தாரா அவர் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்பான எந்த நிகழ்விலும் கலந்து கொள்வதில்லை. பூஜை துவங்கி, பத்திரிக்கையாளர் சந்திப்பு, பட புரமோஷன் நிகழ்ச்சி, இசை வெளியீட்டு விழா, வெற்றிவிழா என எதிலும் அவரை பார்க்க முடியாது. இதை ஒரு கொள்கையாகவே அவர் கடைபிடித்து வருகிறார். இதற்கு தமிழ் திரையுலகில் எதிர்ப்பு இருந்தாலும் அதை அவர் பொருட்படுத்துவதில்லை.
பிகில் டீசர் இல்லாட்டி என்ன இருக்கவே இருக்கு, திரையரங்க உரிமையாளர் அதிரடி அப்டேட் .!
இந்நிலையில், ஒரு ஆங்கில நாளிதழுக்கு சமீபத்தில் அவர் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் பல விஷயங்களை வெளிப்படையாக பேசினார்.
நான் ஒரு தனிமை விரும்பி. நான் என்ன நினைக்கிறேன் என்பதை இந்த உலகம் தெரிந்து கொள்ள தேவையில்லை என நினைக்கிறேன். கூட்டம் என்றாலே எனக்கு அலர்ஜி ஆகிவிடுகிறது. பல சமயங்களில் நான் பேசியதை தவறாக மாற்றி சித்தரித்து விடுகிறார்கள். அதனால் வரும் எதிர்வினைகளை சமாளிப்பது கடினமாக உள்ளது. எனவே, நடிக்கும் வேலையை மட்டும் பார்க்கிறேன். மற்றதை என் படங்கள் பேசும்’ என நயன்தாரா கூறியுள்ளார்.