vignesh shivan : இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விஸ்வாசம், ஐரா என நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகிவிட்ட நிலையில், தற்போது நயன்தாராவின் இன்னொரு படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறதாம்.
பில்லா 2 இயக்குநர் சக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கொலையுதிர் காலம்.
பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்துவரும் இப்படம் ஒருவழியாக தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
அண்மையில் சென்சாரில் இப்படம் யு/ஏ சான்றிதழ் வாங்கியதை தொடர்ந்து இப்படத்தின் வியாபாரம் தற்போது துவங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளர் தனஞ்செயன் கைப்பற்றியுள்ளார்.
நட்பே துணை வசூல் எத்தனை கோடி தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
அண்மையில் இப்படத்தை பார்த்த தனஞ்செயன் படம் பிடித்து போகவே அதன் உரிமையை கைப்பற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது.
நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், இந்த படம் முழுமையடையாத படம் என்று கூறிய போதிலும் தற்போது இப்படம் வியாபாரமாகி இருப்பது அவருக்கு நிச்சயம் கடுப்பை ஏற்படுத்தும்.
வியாபாரம் ஆனதை தொடர்ந்து இப்படம் மே இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.