Nayanthara About Simbu's Special Biriyani

ஆர்யாவை விட சிம்பு கொடுத்த பிரியாணியை மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார் நயன்தாரா.

Nayanthara About Simbu’s Special Biriyani : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

நடிகர் ஆர்யாவுடன் இணைந்து ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் சிம்புவுடன் சேர்ந்து இது நம்ம ஆளு, வல்லவன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

ஆர்யா மற்றும் நயன்தாரா ராஜா ராணி படத்தில் நடித்தபோது சூட்டிங் இல்லாத நேரங்களில் மலையாளத்தில் தான் பேசிக் கொள்வார்களாம். காரணம் இருவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

அந்த சமயத்தில் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவின. ஒரு நாள் நடிகர் ஆர்யா நயன்தாராவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் கையால் பிரியாணி சமைத்து கொடுத்துள்ளார்.

அதேபோல் சிம்பு தான் நயன்தாரா பிரியாணியை விரும்பி சாப்பிட காரணம் எனவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனால் நயன்தாராவிடம் பிரியாணி சமைத்துக் கொடுப்பதில் யார் பெஸ்ட்? ஆர்யாவா சிம்புவா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு நயன்தாரா எனக்கு முதன் முதலாக பிரியாணி சமைத்து கொடுத்தவர் ஆர்யா தான்.

ஆனாலும் சிம்பு கொடுத்த பிரியாணியை என்னால் மறக்கவே முடியாது என தெரிவித்துள்ளார்.