Narendra Modi Speech
Narendra Modi Speech

Narendra Modi Speech – திருப்பூர்: பிரதமர் மோடி , பல்வேறு நலத்திட்டங்களை திருப்பூரில் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து காமராஜர் ஆட்சியை மக்களுக்கு பாஜக கொடுக்கும் என தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பாஜ தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: கயிலாயம், நொய்யல், அமராவதி உள்ள புண்ணிய பூமியில் உள்ள தமிழர்களுக்கு வணக்கம் என தன் உரையை மோடி துவக்கினர்.

தொழில்முனைவோர் பின்னலாடை தொழில் நடக்கும் திருப்பூர், நாட்டிற்கு உதாரணமாக திகழ்கிறது. துணிச்சலுக்கான, தைரியத்துக்கான மண் திருப்பூர் மண், அர்ப்பணிப்பு நிறைந்த மக்கள் நிறைந்த மண் என திருப்பூர் குறித்து கருத்து தெரிவித்தார்.

பின்னர் காங்கிரஸ் குறித்து பேசுகையில், ‘காங்கிரஸிடம் என்ன கேட்டாலும் அவர்களிடம் மோடி என்ற வார்த்தைதான் இருக்கும். எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை.

இது போன்ற நல்ல ஆட்சியைத்தான் காமராஜர் விரும்பினார்.எனவே காமராஜர் ஆட்சியை மக்களுக்கு பாஜக கொடுக்கும் என தெரிவித்தார்’ .

மேலும் தற்போது மக்கள் ஆட்சி நடந்து வருகிறது. நான் மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள்.

ஆனால் அவர்கள்தான் எங்களை பார்த்து பயப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் ஒன்றாக மெகா கூட்டணி வைத்துள்ளனர் என்று கூறினார்.

மேலும் நான்கரை ஆண்டுகால ஆட்சியில், அனைவருக்கும் வீடு திட்டத்தில் 1 கோடியே 30 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி தந்துள்ளோம்.

மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் 11 லட்சம் பேர் பயன் பெற்றிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, சமூக நீதிதான் பாஜகவின் குறிக்கோள். சமூக நீதிக்காக பாடுபட்ட ஒரே கட்சி பாஜகதான். எஸ்சி, எஸ்டி மக்களின் நலனை பாதுகாக்க நாங்கள்தான் சட்டம் கொண்டு வந்தோம். நாடு முன்னேறட்டும், மக்கள் முன்னேறட்டும் என்று கூறினார்.