Narendra Modi Speech :
டெல்லி: வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அன்று நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற போவதாகவும், முக்கிய தகவல்களை தெரிவிக்க உள்ளதாகவும் டிவிட்டரில் மோடி தகவல் தெரிவித்துள்ளார்.
17-வது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தப்பின், பிரதமர் மோடி கடந்த மார்ச் 27-ம் தேதி, நாட்டு மக்களிடம் உரையாற்ற போவதாகவும்,
அதில் முக்கிய தகவல்களை தெரிவிக்க உள்ளேன் என்றும், அதனை அனைவரும் ஊடகங்கள் மூலம் காணுங்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும் பொதுமக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் “மிஷன் சக்தி” சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, மிஷன் சக்தி சோதனை இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல. மேலும் விண்ணில் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றியடைந்துள்ளது என்று கூறினார்.
மேலும் உலகின் விண்வெளித்துறையில் 4-வது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. விண்வெளியில் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்தது.
“பெரிய மோடி தூங்கிவிட்டார்.. சிறிய மோடி தப்பிவிட்டார்..” : காங்கிரஸ் கட்சி விமர்சனம்!
அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா விண்வெளியில் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாமல் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என கூறினார்.
அதைத்தொடர்ந்து, காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ், திமுக கட்சிகள் கடும் எதிப்பு தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.
மேலும் பிரதமர் மோடியின் உரையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் எனவும், விரைவில் அனைத்துக்கட்சி கூட்டத்தையும் பிரதமர் மோடி கூட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.