YouTube video

Narendha Modi Wishes to Tamilnadu : தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரத்தில் வங்க கடலில் உருவான நிவர் புயல் மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடந்தது.

இதனால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. புயலை எதிர்கொள்ள தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருந்ததன் காரணமாக பாதிப்பு மற்றும் சேதாரமும் வெகுவாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசி வாயிலாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தொடர்பு கொண்டு நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.