namma veetu pillai
நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்திற்கு சுவற்றில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

Namma Veettu Pillai poster getting appreciation – சமீபத்தில் சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்கிற இளம்பெண் பரிதாபமாக பலியான சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்களிலும் இந்த விவகாரம் அதிகமாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல கட்சிகள் இனிமேல் பேனர் வைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டனர். மேலும், முன்னணி நடிகர்களும் தங்கள் திரைப்படங்களுக்கு பேனர் வைக்க வேண்டாம் என கட்டளையிட்டனர்.

இந்நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பழைய முறையில் சுவற்றில் எழுதி விளம்பரம் செய்துள்ளனர்.

பிகினி உடையில் கடற்கரையில் கவர்ச்சி காட்டிய ராய் லட்சுமி – வைரல் புகைப்படம்

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

10, 15 வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சிகள் மற்றும் புதிய திரைப்படங்களுக்கு சுவற்றில் விளம்பரம் செய்வதே பழக்கமாக இருந்தது. பேனர் கலாச்சாரம் வந்த பின் சுவற்றில் எழுதுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. சுபஸ்ரீயின் மரணத்திற்கு பின் தற்போது அதே முறை மீண்டும் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.