படப்பிடிப்பின்போது நமிதா கிணற்றுக்குள் தவறி விழுந்ததால் சூட்டிங் பார்க்க கூடியிருந்த பொதுமக்கள் பதறிப் போய் உள்ளனர்.
Namitha in Bow Bow Shooting Spot : தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நமிதா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வந்தார்.
தற்போது நமிதா திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு பவ் பவ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் அருகே உள்ள சித்ராஞ்சலி ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது. நமிதாவின் படம் என்பதால் ஊர்மக்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்துள்ளனர்.
படத்தின் காட்சி ஒன்றில் நாயகி கிணற்றில் தவறி விழுந்த அவரை அவர் வீட்டில் நாய் கஷ்டப்பட்டு காப்பாற்றுவது போல படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் நமிதா கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்த போது அவரின் செல்பேசி தவறி கிணற்றில் விழ அதை எட்டிப் பிடிக்க முயன்ற அவரும் கிணற்றுக்குள் விழுந்து விடுகிறார்.
இதனை பார்த்த பொதுமக்கள் நமிதா உண்மையில் கிணற்றுக்குள் விழுந்து விட்டதாக ஐயோ அம்மா என அலறியடித்து அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர்.
அதன் பின்னர் அது படத்திற்காக திட்டமிட்டு எடுக்கப்பட்ட காட்சி என தெரிந்த பின்னர்தான் பொதுமக்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.
நமிதா கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்சி படமாக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.