Nadodigal 2 Review
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நாடோடிகள் 2. இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

மக்களுக்கு எதிரான விசயங்களையும், ஜாதி பிரச்சனைகளையும் எதிர்த்து சமூகத்திற்காக போராடி வரும் போராளி தான் சசிகுமார். இவரின் கூட்டத்தில் முக்கியமான ஒருவர் அஞ்சலி.

சசிகுமார் மக்களுக்காக போராடி வருவதால் அவருக்கு சொந்த மாமா கூட பெண் கொடுக்க முன்வரவில்லை. இப்படியான நிலையில் அதுல்யாவின் பெற்றோர் அதுல்யாவை திருமணம் செய்து வைக்க முன் வருகின்றனர்.

சசிகுமார், அதுல்யாவிற்கு திருமணமும் நடக்கிறது, திருமணத்திற்கு முன்னர் அதுல்யாவிற்கு ஜாதி வெறி பிடித்த குடும்பத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பது தெரிய வருகிறது.

அதன் பின்னர் என்ன நடந்தது? சசிகுமார் என்ன முடிவெடுத்தார்? இதனால் என்னென்ன பிரச்சனைகள் உருவாகின்றன? அதனை எப்படி சமாளிக்கின்றனர் என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

சசிகுமார் சமூக போராளியாக இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதே போல் அஞ்சலி, அதுல்யா ஆகியோரும் மற்ற நடிகர்களும் அவர்களின் கதாபாத்திரங்களை திறம்பட செய்து கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை அசத்தல். பாடல்கள் ரசிக்கும் ரகம்.

ஒளிப்பதிவு :

என். கே ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளது.

இயக்கம் :

சமுத்திரக்கனி எப்போதும் சமூக சிந்தனையுடனான படங்களை கொடுப்பவர். இந்த படத்தை அப்படி தான் ஜாதி பிரச்சனைகளையும் ஜாதி வெறி பிடித்தவர்களுக்கு பாடம் புகட்டும் விதமாக கொடுத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. சசிகுமார், அதுல்யா, அஞ்சலி நடிப்பு
2. பின்னணி இசை, ஒளிப்பதிவு
3. சமுத்திரக்கனியின் இயக்கம்
4. கதைகளம்

தம்ப்ஸ் டவுன் :

குறை என சொல்லும் அளவிற்கு பெரிய தவறுகள் எதுவும் இல்லை.

REVIEW OVERVIEW
நாடோடிகள் 2 விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
nadodigal-2-movie-reviewமொத்தத்தில் நாடோடிகள் 2 சமுத்திரக்கனி, சசிகுமார் கூட்டணிக்கு இன்னொரு வெற்றி.