தடைகளை தகர்த்தெறிந்து இன்றே நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார், பரணி, அஞ்சலி, அதுல்யா ரவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாடோடிகள் 2.
உலகம் முழுவதும் இன்று வெளியாக இருந்த இந்த படத்திற்கு நேற்று நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதால் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டு இருந்தது.
தற்போது படக்குழு அனைத்து பிரச்சனைகளையும் களைந்து எவ்வித சிக்கலும் இல்லாமல் படத்தை இன்றே ரிலீஸ் செய்கிறது.
இதனால் நாடோடிகள் 2 திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.