தடைகளை உடைத்து அனைத்து தியேட்டர்களிலும் நாடோடிகள் 2 திரைப்படம் ரிலீஸாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாடோடிகள் 2.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் நேற்றே உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் இப்படத்தின் ரிலீசுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதனால் படம் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது, அதன் பின்னர் படக்குழு அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து இன்று உலகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்துள்ளனர்.