சென்னை அம்பத்தூரில் உள்ள பிரபல முருகன் இட்லி கடையில், உணவில் புளு இருந்த காரணத்தில் அந்த கடையின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Murugan idli shop license is cancelled in Ambatthur – தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பல இடங்களில் முருகன் இட்லி கடையின் கிளை அமைந்துள்ளது.
அங்கு அனைத்து வகையான உணவுகள் வழங்கப்பட்டாலும் இட்லி மிகவும் சிறப்பான முறையில் தயாரிக்கப்படுகிறது.
ஆரோக்கியத்தின் பெட்டி என்றழைக்கப்படும் சவுச்சவ் நன்மைகளைப் பார்ப்போமா?
இந்நிலையில், சமீபத்தில் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள முருகன் இட்லி கடையில் ஒருவர் சாப்பிட சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு வழங்கப்பட்ட உணவில் ஒரு புளு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட நியமன அலுவலர் இந்த கடைக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.