mk.stalin Speech :
சென்னை: சென்னை கொளத்தூரில் 82 லட்சம் ரூபாயில் சீரமைக்கப்பட்ட ஹரிதாஸ் தாமரை குளத்தை கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் வேலூர் மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் பகுதியில் உள்ள ஹரிதாஸ் தாமரை குளத்தை 5 கட்டமாக ஸ்டாலின் ஆய்வு செய்து, இந்த குளத்தை முழுவதுமாக சீரமைக்க உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த சீரமைப்பு பணிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.82 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இந்த ஹரிதாஸ் தாமரை குளத்தின் மொத்த பரப்பளவு 7,200 சதுர அடியாகும். இந்த குளத்தை சுற்றி பொதுமக்கள் நடக்க எதுவாக நடைபாதை, சிறுவர்கள் விளையாட விளையாட்டுத் திடல் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.
20 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: ஸ்டாலின் தகவல்!
இந்நிலையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் குளத்தை திறந்து வைத்தார்.
மேலும் குளத்தை சுற்றிலும் 60 மரக்கன்றுகளை நட்டு வைத்தார். கோடைகாலங்களில், கொளத்தூர் பகுதியில் அதிக தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதன் காரணமாகவே, ரூ.82 லட்சம் செலவில் குளம் சீரமைக்கப்பட்டுள்ளது.
எனவே குளம் சீரமைக்கபட்டதன் மூலம் இனி தண்ணீர் அனைத்து காலங்களிலும் சேமித்து வைக்கப்படும். மேலும் மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் தண்ணீர் குழாய் மூலம் குளத்திற்கு செல்லும் வண்ணம் சீரமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குளத்தை திறந்து வைத்த பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.
கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின், ‘நடந்து முடிந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விட, வேலூர் மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்’ என பேட்டி அளித்துள்ளார்