உயர்கல்வித்துறை அமைச்சர் டியூட்டி அன்பழகனை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Minister Thangamani Tested Corona Positive : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்தியாவில் மட்டும் இதுவரை 7.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
அரசியல் வட்டாரத்தில் திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ அன்பழகனுக்கு கொரானா உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரைத் தொடர்ந்து திமுக அதிமுக என இரண்டு கட்சிகளையும் சேர்ந்த பல எம்எல்ஏக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அதிமுகவைச் சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகனுக்கு கொரானா உறுதி செய்யப்பட்டு அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரைத் தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான பா. வளர்மதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் மின் துறை அமைச்சர் தங்கமணிக்கும் கொரானா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து நாமக்கல்லில் உள்ள அவரது அலுவலகம் மூடப்பட்டுள்ளது.