Minister Sengottaiyan About School Reopen
Minister Sengottaiyan About School Reopen

பள்ளிகளைத் திறப்பது எப்போது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Minister Sengottaiyan About School Reopen : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவும் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

சியான் 60 படத்திலும் தொடரும் தனுஷ் பட மேஜிக் – வெளியானது அதிரடி அப்டேட்

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பது குறித்து பேசியுள்ளார்.

அதாவது தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. முதல்வருடன் பேசி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் ஆன்லைன் வழியாக கல்வி கற்பிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.