Minister Jayakumar Speech in Chennai

சசிகலாவும் தினகரனும் அழைப்பது எங்களை இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசியுள்ளார்.

Minister Jayakumar Speech in Chennai : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.

சென்னை திரும்பிய அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய போது அதிமுகவினர் எந்தவித பிரிவினையும் இல்லாமல் செயல்பட வேண்டும் என பேசினார்.

இந்த நிலையில் அ.தி.மு.க உட்கட்சி ஆலோசனை கூட்டத்தில், கட்சியினரிடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளை விட்டு பணியாற்றும் பொருட்டு அமைச்சர் ”அண்ணன் தம்பி” என்று கூறியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சசிலாவும், தினகரனும் ஒன்றிணைவோம் வா என்று தி.மு.கவை அழைக்கின்றனர். அவர்கள் இருவருக்கும் பொது எதிரி அ.தி.மு.க. எங்களுக்கு பொது எதிரி தி.மு.க. அவர்கள் ஒன்றினைவோம் வா என்று தி.மு.கவுக்கு தான் அழைப்பு விடுக்கின்றனர், எங்களுக்கு அல்ல என தெரிவித்துள்ளார்.