Meera Mitun‘s Viral Tweet On Social Media Goes Viral
தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.
தன்னுடைய சுய விளம்பரத்திற்காக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விஜய், சூர்யா ஆகியோரை கோலிவுட் மாபியா என கண்டபடி விமர்சனம் செய்து வருகிறார்.
இதனால் மீரா மற்றும் சூர்யா, விஜய் ரசிகர்களிடையே தினம் தினம் மோதல் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் தொடர்ந்து மீரா மிதுன் எதையாவது பதிவிட்டு வம்பிழுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்குத் தானே RIP கூறி கொண்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் விரைவில் தன்னுடைய மரணம் குறித்து விசாரணை தொடங்கும், உடற்கூறு நடக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவருடைய இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ரசிகர்கள் பலர் செத்து தொலை என்றே கமெண்ட்டுகளை அடித்துள்ளனர்.
இன்னொரு ரசிகர் நாளைக்கு சூர்யா மற்றும் விஜய் ஆகியோர் என்னுடைய ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து விட்டார்கள். நான் மில்லியன் கணக்கான பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்க ஆசைப்படுகிறேன் என எதையாவது கதையை அளந்து விடுவார் எனவும் கமெண்ட் அடித்துள்ளார்.