மீரா மிதுனுக்கு லஞ்ச ஒழிப்பு துறையில் அளிக்கப்பட்டு இருந்த பதவி பறிக்கப்பட்டு விட்டதாக நோட்டீஸ் ஒன்று சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் மீரா மிதுன்.
தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் மீரா சமீபத்தில் தான் லஞ்ச ஒழிப்பு துறையில் முக்கிய பதவி ஒன்றை பெற்றிருப்பதாகவும் இனி என்னிடம் இருந்து யாரும் தப்ப முடியாது எனவும் கூறி ட்வீட் ஒன்றை பதிவு செய்திருந்தார். ஆனால் அதன் பின்னர் தான் தெரிய வந்தது அது தான்னார்வலர் பதவி என்பது.
இந்நிலையில் தற்போது அந்த பதவியும் பறிக்கப்பட்டு விட்டதாக அறிக்கை ஒன்று வைரலாகி வருகிறது. அதற்கான காரணம் அவர் மீதுள்ள FIR தான் காரணம் என குறிப்பிட்டுள்ளது.
ஆனால் மீரா மிதுன் அந்த அறிக்கையை வெளியிட்டு இதை நான் நேற்று தான் பார்த்தேன், எனக்கு லெட்டர் எதுவும் வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
Yesterday I noticed the criminal who is harassing me for one year openly said he is going to release termination letter of mine. Today a letter is released in an online press.I didn’t get any letter from my national chairman yet Howz this possible ?Am Surprised! @DeccanChronicle pic.twitter.com/3nWVv5MAMf
— Meera Mitun (@meera_mitun) December 13, 2019