Maruthi Suzuki Business in Lock Down : நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, கடந்த ஜூன் 30 வரையிலான முதல் காலாண்டில் ரூ.268.3 கோடி நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளதாக பதிவை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மொத்தமாக 76,599வாகனங்களை மாருதி சுசுகி இந்தியா விற்பனை செய்துள்ளது.
அதில் 67,027 வாகனங்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 9,572வாகனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
கடந்த 2019-2020 காலகட்டத்தில் முதல் காலாண்டில் மொத்தம் 4,02,594 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
“கொரோனா நோய் தோற்றால் ஏற்பட்டுள்ள வாகன விற்பனை சரிவால் வரலாறு காணாத வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் பொது முடக்க காலத்தில், பூஜ்ஜிய வாகன உற்பத்தியையும் விற்பனையையும் சந்தித்துள்ளோம் மே மாதம் தான் சிறிய அளவில் உற்பத்தி ஆரம்பித்தோம்” என்று மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.