gang rape
கள்ளக்காதலனுடன் தனிமையில் சென்ற பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Married women gone with illegal lover in salem – சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள சின்னமநாயக்கன் பாளையத்தை சேர்ந்த திருமணமான ஒரு பெண் அங்குள்ள ஒரு ஆலையில் பணிபுரிந்து வருகிறது. அப்போது, அவருடன் வேலை பார்க்கும் தினேஷ் என்கிற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

ஒத்த செருப்பை விளம்பரப்படுத்த ரசிகர் கொடுத்த சூப்பர் ஐடியா – பாராட்டிய பார்த்திபன்

இதையடுத்து, அருகிலிருந்து காட்டுப்பகுதிக்குள் தனிமையில் இருப்பதற்காக இருவரும் சென்றுள்ளனர். அப்போது, அங்கு 6 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. தினேஷை அடித்தி துரத்தி விட்டு அப்பெண்ணை வனப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.

இந்நிலையில், ஊருக்குள் ஓடிவந்த தினேஷ் பொதுமக்களிடம் இதுபற்றி கூறி அவர்களை அழைத்து சென்றுள்ளார். அவர்களை கண்டதும் அப்பெண்ணை விட்டுவிட்டு அந்த கும்பல் ஓடி விட்டது. அதன்பின் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அந்த 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.