செம்பருத்தி சீரியலில் பிரபல தமிழ் நடிகரான மனோபாலா இணைந்துள்ளார்.
Manobala Joined in Sembaruthi Serial : தமிழ் சின்னத்திரையில் TRPல் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
கார்த்திக் ராஜ், ஷபானா, பிரியா ராமன் என பலர் இந்த சீரியலில் இணைந்து நடித்து வருகின்றனர். நாளுக்கு நாள் சீரியலின் விறுவிறுப்பு கூடிக்கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் பிரபல தமிழ் நடிகரான மனோபாலா அவர்கள் இணைந்துள்ளார்.
இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். எவ்வளவு நாளைக்குத்தான் கேமரா முன்னாடி நடிக்காமல் இருக்கிறது. செம்பருத்தி சீரியலில் வலுவான கதாபாத்திரம் கிடைத்தால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் இந்த சீரியலில் என்னுடைய கதாபாத்திரம் வலுவானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். நான் இந்த சீரியலில் கமிட்டாகும் வரை இது நம்பர் 1 சீரியல் என எனக்கு தெரியாது. இந்த சீரியலில் நடிக்கிறேன் என கூறியதும் அனைவரும் பாராட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இனி சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் நடிக்கலாம் என முடிவு செய்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அண்ணாத்த முதல் முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் வரை கிட்டத்தட்ட ஒன்பது படங்களில் கமிட்டாகி இருப்பதாகவும் மனோபாலா அவர்கள் தெரிவித்துள்ளார்.
அப்போ தளபதி 65 படத்திலும் மனோபாலாவை பார்க்கலாம் என்கிறது சினிமா வட்டாரம்.