கிராமத்திலிருந்து கருத்துப்போய் சென்னை திரும்பியுள்ளார் மணிமேகலை.
Manimegalai New Look After Village Travel : தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் மணிமேகலை.
தன்னுடைய வீட்டாரின் எதிர்ப்புடன் காதலன் உசைன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின்னர் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். மேலும் இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை மற்றும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மேலும் கிராமம் ஒன்றிற்கு சென்றிருந்த மணிமேகலை ஊரடங்கு உத்தரவு காரணமாக 61 நாட்கள் அங்கேயே மாட்டிக் கொண்டார்.
கிராமத்தில் மாட்டிக் கொண்டாலும் தினம் தினம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வந்தார். மாடு மேய்ப்பது, வரட்டி தட்டுவது, முறுக்கு சுடுவது என ஜாலியாக பொழுதை போக்கினார்.
இரவு, பகல் என பாராமல் கிராமத்தில் வெளியே சுற்றித் திரிந்ததால் கருகருவென கருத்து போயுள்ளார் மணிமேகலை.
இவர் சென்னை திரும்பியதும் தன் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு சென்னை வந்தாச்சு இனி உனக்கு நான் எனக்கு நீ நமக்கு அந்த சமையல்கார அக்கா தான் என பதிவிட்டிருந்தார்.
ஹைதராபாத்திலிருந்து பைக்கிலேயே சென்னை வந்து சேர்ந்த அஜித் – பதறிப்போன வலிமை படக்குழு.!
இந்த புகைப்படத்தில் மணிமேகலை கருத்த குட்டியாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் என்ன இவ்வளவு கருப்பா ஆகிட்டீங்க என கேட்டு வருகின்றனர்.
அதற்கு மணிமேகலை கிராமத்தில் கொஞ்ச நஞ்ச ஆட்டமா?? அதான் கொஞ்சம் இல்ல நிறையவே கருத்துப் போய் விட்டேன் என கூறியுள்ளார்.
மேலும் இனி ஒவ்வொரு வருடமும் அந்த கிராமத்திற்கு சென்று தன்னுடைய பொழுதை கழிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை திரும்பிய மறுநாள் காலை எழுந்ததும் இந்த கிராமத்தின் காலை பொழுதை மிஸ் செய்வதாகவும் இன்ஸ்டா ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவர் வருத்தப்பட்டுள்ளார்.