selfie

சிறுவன் சுர்ஜித்தை அடக்கம் செய்யும் போது அங்கு சிலர் செல்பி எடுத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து காப்பாற்ற முடியாமல் குழந்தை சிறுவன் சுர்ஜித் மரணமடைந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் இழப்பிற்கு தமிழகமே இரங்கல் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், சுர்ஜித்தின் உடல் அடக்கம் செய்யப்படும்போது அங்கு சிலர் செல்பி எடுத்தனர். இதைக்கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

எங்கே செல்பி எடுக்க வேண்டும் என விவஸ்தை இல்லையா? நீங்கள் எல்லாம் மனிதர்கள்தானா? என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.