ஓய்வு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி.
Mahendra Singh Dhoni Announces Retirement : இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஒருவராக இருந்து வருபவர் எம்எஸ் தோனி. இந்தியா முழுவதும் தோனிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
39 வயதாகும் தோனி விரைவில் ஓய்வுபெற இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எம்எஸ் தோனி அதில் தன்னுடைய ஓய்வு குறித்து அறிவித்துள்ளார்.
அதாவது தோனி சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் எம்எஸ் தோனி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.