ஜெயஸ்ரீ தன்னுடைய கணவர் ஈஸ்வருக்கும் மஹாலக்ஷ்மிக்கும் தொடர்பு இருப்பதாக போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் தற்போது ஜெயஸ்ரீ மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் வம்சம் உள்ளிட்ட சீரியலில் நடித்து பிரபலமானவர் ஜெயஸ்ரீ. இவர் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு சீரியல் நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தேவதையை கண்டேன் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் தான் மஹாலட்சுமியும் நடித்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே கள்ள தொடர்பு இருப்பதாக தன் கண் முன்னேயே ஈஸ்வர் மகாலட்சுமியிடம் கொஞ்சி கொஞ்சி பேசுவதாகவும் அவரின் குழந்தையை அப்பா என சொல்லி அழைக்க சொல்வதாகவும் புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் மஹாலட்சுமி போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் எனக்கும் ஈஸ்வருக்கு எந்த தொடர்பும் இல்லை. ஜெயஸ்ரீ என் மீது அவதூறு பரப்புகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் காட்டும் புகைப்படங்கள் எல்லாம் நாங்கள் சேர்ந்து நடித்த புகைப்படங்கள் தான் என குறிப்பிட்டுள்ளார்.