தமிழகத்தில் தளபதி விஜய் நல்லாட்சி கொடுப்பார் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Madurai Vijay Fans Political Poster : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது வெளியாகும் படங்களில் தொடர்ந்து அரசியல் பேசி வருகிறார்.
இதனால் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டு வருகின்றனர்.
மேலும் சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற பெயரில் தளபதி விஜய்யை மரக்கன்று நட கூறியிருந்தார்.
ஆடிய ஆட்டத்துக்கு பதிலடி.. மீரா மிதுனுக்கு விஜய் ரசிகர்கள் அடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
நடிகர் விஜய்யும இந்த சவாலை ஏற்று மரக்கன்றுகளை நட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டார்.
இந்தப் புகைப்படங்களை வைத்து மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், அந்த போஸ்டரில் ஆந்திரா நடிகர் சொன்னதற்காக இன்று மரம் நட்ட விஜய், நாளை ஆந்திரா முதல்வரைப் போல நல்லாட்சியை அமைத்து தமிழகத்தை காப்பார் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் போஸ்டர் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.