Madurai Muthu About VJ Chithra

சித்ராவின் ஆசை நிறைவேறாமலேயே இறந்துவிட்டதாக விஜய் டிவி பிரபலம் ஒருவர் கண்ணீருடன் பேசியுள்ளார்.

Madurai Muthu About VJ Chithra : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி பல தொலைக்காட்சி சேனல்களில் பணிபுரிந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார்.

இந்த சீரியல் மூலமாக இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இப்படியான நிலையில் நடிகை சித்ரா மனவுளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் சித்ராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் மதுரை முத்து பேட்டி ஒன்றில் சித்ரா குறித்து பேசியுள்ளார்.

அதாவது சித்ராவின் ஆசையே விஜய் டிவியில் சிறந்த நடிகைக்கான விருது வாங்க வேண்டும் என்பதுதான். அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அது நடந்து இருக்கும். அதற்கான தகுதி அவரிடம் உள்ளது.

தொகுப்பாளராக ஒரு பெண் பயணிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். வெளி நிகழ்ச்சிக்குச் என்றாலே அவர்கள் பற்றிய பார்வை பார்வையாளர்கள் மத்தியில் வேறு விதமாகத்தான் இருக்கும். ரசிகர்களுடன் சாதாரணமாக ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொண்டால் கூட அது சமூகவலைதளங்களில் வேறுவிதமாக பேசப்படும்.

ஆனால் அது அத்தனையும் கடந்து நல்ல தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார் சித்ரா. அவருடைய ஆசை நிறைவேறாமலேயே காற்றோடு காற்றாக கலந்து விட்டார் என கண்கலங்கியபடி பேசியுள்ளார்.